சிதம்பரத்தில் காவலர்கள் மீது தாக்குதல்

     கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துறையினர் மீது கொள்ளையன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன திருட்டில் தொடர்புடைய வெற்றிச்செல்வன் என்ற கொள்ளையன் வீட்டிற்கு நள்ளிரவில் காவல்துறையினர் சென்றனர்.
அப்போது பிரபு என்ற காவலரை மதுபான பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை குமரேசன் என்ற காவலர் பிடிக்க முயன்றார். அவரை அரிவாள்மனையால் வெட்டிய கொள்ளையன் வெற்றிச்செல்வன் இருட்டில் தப்பியோடிவிட்டான்.
கொள்ளையனின் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தப்பியோடிய கொள்ளையன் வெற்றிச்செல்வனை பிடிக்க கடலூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக காவல்துறையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இணைய செய்தியாளர் - s.குருஜி