கடலூரில் பொய்த்து போகும் விவசாயம்: விவசாயிகள் வேதனை



பருவமழை பொய்த்து போனதாலும், தொடர் மின்வெட்டாலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குச்சிபாளையத்தில் பயிர்கள் கருகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தானே புயலின் தாக்கத்தில் உருக்குலைந்து போன விவசாயம், தற்போது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயம் முற்றிலும் முடங்கிவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் அலட்சம் காட்டுவதாகவும், இதனால், 400 ஏக்கருக்கும் அதிகமாக பயிர் செய்த நிலை மாறி தற்போது 40 ஏக்கர் மட்டுமே பயிர் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
                                          - நாகை மகாகிருஷ்ணன்