கடலூரில் ஓய்வுபெற்ற காவலர்களின் பணம் பலகோடி ரூபாய் மோசடி


 

       கடலூரில் ஓய்வுபெற்ற காவலர்களின் பணம் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சிதம்பரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலர் செல்வராஜ் என்பவர், தமக்கு வரவேண்டிய பணிக்கொடை பணம் வராதது குறித்து மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். ஆனால், அவருக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வங்கி மூலம் அனுப்பப்பட்டுவிட்டதாக கருவூல அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, வங்கியில் சென்று விசாரித்தபோது, செல்வராஜுக்கு அனுப்பப்பட்டட காசோலைகள் அனைத்தும் வேறு ஒருவரது வங்கிக் கணக்கில் போடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோன்று, கோடிக்கணக்கில் பலரது பணம், மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முரளி என்ற ஓய்வுபெற்ற காவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோன்று, இறந்துபோன காவலர்கள் பலரது பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-நாகை மகாகிருஷ்ணன்