கழிவுகளால் மாசுபடும் கெடிலம் ஆறு


   டலூர் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் கழிவுகள் கலப்பதால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
இச்சம்பவம் தொடர்ந்து நடப்பதாகவும், மீன்களை நாய்களும், காகங்கள் உள்ளிட்ட பறவைகளும் தூக்கிச் சென்று ஆங்காங்கே போட்டுவிடுவதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக்கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் கழிவுகள் கலப்பதாலும், நெல்லிக்குப்பம் நகராட்சியின் கழிவு நீர் கலப்பதாலுமே கெடிலம் ஆற்றில் அவ்வப்போது மீன்கள் செத்து மிதப்பதாகவும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
                                 இணைய செய்தியாளர் - s.குருஜி