சுற்றுச்சூழல்

ஞ்சில்லா உணவு 
மாசில்லா தண்ணீர் 
தூசில்லா காற்று
துன்பமில்லா வாழ்வு !
இவைகள் இந்த பூமியில் உள்ள அனைவருக்கும் உண்டாண உரிமை 
                                                               ஆனால்
நஞ்சுள்ள உணவு 
மாசுடைந்த தண்ணீர்
தூசி நிறைந்த காற்று
துன்பமிக்க வாழ்வு ! 
இவைதான் இன்றைய நிலை !

                           இந்த பூமியை ஆளுக்குஆள் பங்கு போட்டு கொண்டு மாசுபடுத்திவருகிறோம். வாகனங்களின் (பெருக்கம்) புகை, குப்பை எரிப்பு, சாயப்பட்றை கழிவுகள், தோல்பதனீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்ச்சாலைகள், பிளாஸ்டிக் பயன்பாடுகள், விவசாய நிலத்தில் ராசயாண உரம் மற்றும் பூச்சி கொல்லி இடுதல், மணல் கொள்ளை, மரம் வெட்டுதல், கணிமங்கள் சுரண்டுதல், குளங்கள, ஏரிகள் காணமல் போவது நகரமயம் என்று நீண்டு கொண்டபோகிறது.......?
          மக்களே (இளைஞர்கேள) விழித்தெழுங்கள் இந்த பூமியை காப்பபோம். நல்ல மண்வளம், சுத்தமான காற்று, தூய தண்ணீர், மும்மாரி மழை, முப்போக விளைச்சல், இயற்கையான விவசாய உற்பத்தி, நிறைந்த மரங்கள், வருடம் முழுவதும் நிறைந்த நீர் நிலைகள் என நாம் அடுத்த தலைமுறைக்கு பெற்று, விடடுச்செல்வோம். !
                                                                                  -பசுமை நாயகன்