கடலூரில் போதையில் இருந்தவரிடமிருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல்



  கடலூர் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  நேற்று நள்ளிரவு காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்தின்போது, சந்தேகத்தின்பேரில் அவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அவரிடம் இருந்த தங்கம் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  போதையில் இருந்த நபர் பெயர் கிருபானந்த வாரியார் என்பதும் கடலூரை சேர்ந்த இவர் நகை தொழிலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்த தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணம் இல்லாததால் அதுபற்றி காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.