கடலூர் தீ விபத்து : உதவி மேலாளர் மற்றும் டெக்னீசியன் மீது வழக்கு பதிவு

       கடலூரில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் டெக்னீஷியன் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழிற்சாலை தீ விபத்தின்போது எழும்பிய புகையால்,  10 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 60க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரசாயன தொழிற்சாலை தீ விபத்தினால், காற்று எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதை கணக்கிட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்னையில் இருந்து இன்று கடலூர் விரைகின்றனர்.