கடல் அரிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

             புதுச்சேரியை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் சின்ன முதலியார் சாவடி எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு தெருக்கள் கடலால் சூழப்பட்டுவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் கடல் அரிப்பே இதற்குக் காரணம் என்று மக்கள் கூறுகின்றனர். இவர்கள், ஊரின் மற்ற பகுதிகளும் கடல் அரிப்புக்குள்ளாகுமானால் தங்களின் நிலை என்னாகுமோ என்று அச்சம் கொள்கின்றனர்.
கடல் அரிப்பால் அழிந்து கொண்டிருக்கும் தங்கள் கிராமத்தைக் காப்பாற்ற அரசு தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், நடவடிக்கை எடுப்பதில் எல்லை ஒரு பிரச்சனையாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.